ஏர்டெல் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது
ஏர்டெல் ரூ.519 மற்றும் ரூ.779 விலையில் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாமுதலிய அம்சங்களைவழங்குகிறது.
ஏர்டெல் அதன் பயனர்களுக்கு தலா 60 மற்றும் 90 நாட்கள் செல்லுபடியாகும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களைச் சேர்த்துள்ளது. 1.5ஜிபி அதிவேக டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் கூடுதல் அம்சங்களைவழங்குகிறது.
தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களைச் சேர்த்துள்ளது. ஏர்டெல் அதன் போட்டியாளரான ரிலையன்ஸ் ஜியோ தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் மற்றும் ஃபைபர் உட்பட பல சுதந்திர தின சலுகைகளை அறிவித்த பிறகு இந்த இரண்டு திட்டங்களையும் வெளியிட்டது. இந்த இரண்டு புதிய ஏர்டெல் திட்டங்களின் விலை ரூ.519 மற்றும் ரூ.779.
இரண்டு ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களும் வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 1.5 ஜிபி அதிவேக டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் மேலும் சில கூடுதல் நன்மைகளை வழங்குகின்றன. இந்த இரண்டு திட்டங்களும் ஏற்கனவே இணையதளத்திலும் Airtel thanks செயலியிலும் பட்டியலிடப்பட்டுள்ளன.